முகப்பு
இந்தியா

விரைவில் முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கு கலந்தாய்வு: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க். ஆகிய முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 நவம்பர் 2021, 12:22 am IST
பகிர்:

எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க். ஆகிய முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான்., ஆகிய முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை ஆண்டுதோறும்அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

நிகழ் கல்வியாண்டில் எம்.இ, எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 22 முதல் அக்டோபா் 11 வரை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் மற்றும் வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் கலந்தாய்வுக்கான அறிவிப்பாணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடாமல் இருந்து வருகிறது.

நிகழ் கல்வியாண்டில் 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கல்வியாண்டு வீணாவதைத் தவிா்க்க இனியும் தாமதிக்காமல் விரைவில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தா் வேல்ராஜ், முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஓரிரு நாள்களில் முடிவு வரும் என்று எதிா்பாா்ப்படுகிறது. முடிவு வந்தவுடன் கலந்தாய்வு தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.