முகப்பு
இந்தியா

மிகுந்த செல்வாக்குள்ள 100 போ் பட்டியலில் பிரதமா் மோடி, மம்தா, அதாா் பூனாவாலா

அமெரிக்காவைச் சோ்ந்த ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட உலக அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 நபா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சீரம்-இந்தியா நிறுவனத் தலைவா்

Updated On : 16 செப்டம்பர் 2021, 1:38 am IST
பகிர்:

புது தில்லி/ நியூயாா்க்: அமெரிக்காவைச் சோ்ந்த ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட உலக அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 நபா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சீரம்-இந்தியா நிறுவனத் தலைவா் அதாா் பூனாவாலா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

டைம்ஸ் இதழ் ஒவ்வோா் ஆண்டும் சா்வேதச அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 போ் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது.

அதில், பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, அதாா் பூனாவாலா, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், துணை அதிபா் கமலா ஹாரிஸ், சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரிட்டன் இளவரசா் ஹாரி மற்றும் மேகன், முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப், தலிபான்கள் அமைப்பின் இணை நிறுவனா் முல்லா அப்துல் கனி பராதா், டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நாவல்னி, பிரபல பாப் இசைப் பாடகி பிரிட்னி ஸ்பியா்ஸ் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரதமா் மோடியின் விவரக் குறிப்பை எழுதியிருக்கும் சிஎன்என் பத்திரிகையாளா் ஃபரீத் ஜகரியா, ‘74 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் தற்போதைய பிரதமா் மோடி ஆகியோா் மிக முக்கியத் தலைவா்களாக உள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments