மெட்ரோ திட்டத்தினை தொடக்கி வைத்து பயணிகளுடன் பயணித்த பிரதமர்
மகாராஷ்டிரத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) தொடக்கி வைத்தார்.
மகாராஷ்டிரத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) தொடக்கி வைத்தார்.
முதல் கட்டத்தில் முடிவடைந்த மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தை தொடங்கி வைத்து பயணிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.
இதையும் படிக்க: ஜிகர்தண்டா-2 டீசர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!
முதல் கட்டத்தில் முடிவடைந்த மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தை தொடங்கி வைத்து பயணிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதமர் ஜீரோ மைல் மெட்ரொ பார்க் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கப்ரி ரயில் நிலையம் வரை அவர் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கான 36 ரயில் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த திட்டத்துக்கு 8,650 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது, ரூ.6700 கோடி செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.