உ.பி.யில் 1,878 ஆமைகள் பறிமுதல்: இருவர் கைது
உத்தரப் பிரதேசத்தின், கான்பூரில் சக்கேசி பகுதியில் கிட்டத்தட்ட 1,878 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின், கான்பூரில் சக்கேசி பகுதியில் கிட்டத்தட்ட 1,878 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சக்கேசி பகுதியில் சன் மைகா சரக்குகளுடன், ஒரு சாக்கு மூட்டையில் ஆமைகள் அடைத்து வைக்கப்பட்டு, அவற்றை மேற்கு வங்காளத்திற்குக் கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்ட இருவரும் ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஜாவேத் மற்றும் பரூக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் லாரி ஓட்டுனர்கள் என்றும், ராஜஸ்தானிலிருந்து சன் மைகா சரக்குகளுடன் மேற்கு வங்கம் நோக்கிச் சென்றதாகவும் ஒப்புக்கொண்டனர். பயணத்தின் இடையில், எட்டாவாவின் பிரபல கடத்தல்காரனான கபூர் அவர்களைத் தொடர்புகொண்டு ஆமைகளின் மூட்டைகளை கொண்டுசெல்லும்படி கூறியுள்ளார்.
பணத்திற்குப் பதிலாக கடல்வாழ் உயிரினங்களைக் கடத்துகின்றனர். அழியும் நிலையில் உள்ள ஆமைகளைக் கடத்துவது வனவிலங்கு ஏஜென்சிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட 2 பேர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.