இந்தியா

காங்கிரஸில் இணைந்த திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள்!

DIN

திரிபுராவில் பதவியை ராஜிநாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் இருவரும் இன்று காங்கிரஸில் இணைந்தனர். 

திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் சுதீப் ராய் பா்மன், ஆசிஷ் சாஹா ஆகிய இருவரும் நேற்று தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன் பாஜகவில் இருந்தும் விலகியுள்ளனர். 

அவர்கள் இருவரும் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இன்று காலை தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டிற்குச் சென்ற அவர்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். 

இதையடுத்து இருவரும் இன்று காங்கிரஸில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதீப் ராய் பா்மன், 'இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இருந்து விலக தயாராக உள்ளனர். ஆனால், சில காரணங்களால் அவர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அனைவரும் அந்தக் கட்சி மீது ஏமாற்றத்தில் உள்ளனர். குஜராத் மற்றும் ஹிமாச்சலுடன் இணைந்து திரிபுராவிலும் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இரு பாஜக எம்எல்ஏக்கள் விலகியதை அடுத்து, 60 உறுப்பினா்களைக் கொண்ட திரிபுரா சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் 33 ஆகக் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT