5 ஆண்டுகளில் பழங்குடிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்! ஜார்கண்ட் முதல்வர்
ஜார்கண்டில் அடுத்த 5 ஆண்டுகளில் பழங்குடிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதியளித்துள்ளார்.
ஜார்கண்டில் அடுத்த 5 ஆண்டுகளில் பழங்குடிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பழங்குடி மக்களை சதித்திட்டம் தீட்டுபவர்கள் ஆள வேண்டும் என நினைக்கிறீர்களா? என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், பேசிய ஹேமந்த் சோரன், சில அரசியல் கட்சியினர் சதித்திட்டம் செய்து பழங்குடி மக்களை வெளியேற்றுகின்றனர். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியில், அமரவைத்தால் வெளியில் இருந்து வருபவர்களை அப்புறப்படுத்தி, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்துவேன். அதற்கு நீங்கள் எனக்கு துணை நிற்க வேண்டும். சதித்திட்டம் தீட்டுபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.