முகப்பு
இந்தியா

வந்தே பாரத் ரயில் மீது எருமை மாடுகள் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!

மும்பையிலிருந்து குஜராத் சென்ற வந்தே பாரத் ரயில் எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். 

Updated On : 7 அக்டோபர் 2022, 10:30 am IST
எருமை மாடுகள் மோதியதில் சேதமடைந்த வந்தே பாரத் ரயில் என்ஜின் முன்பகுதி.
பகிர்:

மும்பையிலிருந்து குஜராத் சென்ற வந்தே பாரத் ரயில் எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். 

மும்பை சென்ட்ரல் - குஜராத் காந்தி நகர் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், மும்பையிலிருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், வத்வா நிலையத்திற்கு மணிநகர் செல்லும் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்தபோது வியாழக்கிழமை காலை 11.15 மணியளவில் 3-4 எருமை மாடுகளின் திடீரென ரயில் பாதையில் குறுக்கே வந்ததால் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரயில் இன்ஜின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் இன்ஜின் முக்கிய பகுதிகள் எதுவும் சேதமடையவில்லை. எருமை மாடுகளின் சடலங்களை அகற்றிய  8 நிமிடங்களுக்கு பின்னர் ரயில் புறப்பட்டு சரியான நேரத்தில் காந்திநகரை சரியான நேரத்தில் சென்றடைந்தது. இதில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினர். 

சேதமடைந்த வந்தே பாரத் எக்ஸ்பிரலஸ் ரயில் மும்பை சென்ட்ரலில் உள்ள பழுதுபார்க்கும் மையத்தில் பழுதுபார்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments