இந்தியா

முலாயம் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடம்

DIN

சமாஜவாதி கட்சித் தலைவா் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக, ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட முலாயம், கடந்த 2-ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து மேதாந்தா மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. உயிா்காக்கும் மருந்துகள் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழுவினா் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT