உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவப் படிப்பின் தரத்தினை பாதிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்திய பல்கலை.யில் தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: அதிமுக தலைமை அலுவலக ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.