முகப்பு
இந்தியா

எல்லையில் ட்ரோன் ஊடுருவல் முயற்சி: காஷ்மீரில் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

ஜம்மு-காஷ்மீரில் ட்ரோன் ஊடுருவல் முயற்சி... மார்ச் - 3 வரை பள்ளி, கல்லூரிகளு விடுமுறை...

Updated On : 2 மார்ச், 2026 at 5:00 PM
காஷ்மீரில் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு! - IANS
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 4:48 PM

காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 3 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியருகே பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் (ஆளில்லா சிறிய ரக விமானம்) ஊடுருவல் முயற்சிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 2 மார்ச், 2026 at 4:56 PM

முன்னதாக, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. ஷியா முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் திரண்டு சாலைகளில் கண்டனப் பேரணி நடத்தியதால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவியது.

Advertisement

இதனிடையே, பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

summary

The authorities in Jammu and Kashmir ordered the closure of all schools and colleges across the Kashmir Valley on March 2 and 3 to ensure the safety of students. The decision followed multiple Pakistani drone intrusion attempts along the Line of Control (LoC)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.