பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.
புது தில்லி: தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.
ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் மம்தா சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தில்லி சென்றார். இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்தார்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து நாளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மம்தா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.