முகப்பு
இந்தியா

சுதந்திர நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்!

நாட்டின் சுதந்திர நாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள். 

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 11:14 AM
பகிர்:

நாட்டின் சுதந்திர நாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.  

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. 

அந்தவகையில் இன்று நாட்டின் சுதந்திர நாளையொட்டி,  சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள். 

Advertisement

கேரளத்தைச் சேர்ந்த நீதி என்பவர் இதனை வடிவமைத்துள்ளார். இந்தியாவின் கலாசாரத்தை சித்தரிக்கும் வகையிலும் அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் வெளிப்பாடாக கவன ஈர்ப்புச் சித்திரத்தில் பட்டம் இடம்பெற்றுள்ளது. 

நாட்டின் சுதந்திர நாள் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.