முகப்பு
இந்தியா

இலவசங்கள் வழக்கு: நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் யோசனை

தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா யோசனை தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஆகஸ்ட் 2022, 12:50 pm IST
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா யோசனை தெரிவித்துள்ளார்.

இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு நிபுணர் குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.

மேலும், இலவசங்கள் தொடர்பான ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை. தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments