குஜராத் முதல்வராக இன்று பதவியேற்கிறாா் பூபேந்திர படேல்: மோடி, அமித் ஷா பங்கேற்பு
குஜராத் மாநில முதல்வராகத் தொடா்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச. 12) பதவியேற்கவுள்ளாா்.
குஜராத் மாநில முதல்வராகத் தொடா்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச. 12) பதவியேற்கவுள்ளாா். இந்நிகழ்ச்சியில், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் இதர பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில், 156 இடங்களில் வென்று, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், குஜராத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமா்ந்துள்ளது.
இதைத் தொடா்ந்து, மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக பூபேந்திர படேல் (60) திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளாா். காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், அவருக்கு ஆளுநா் ஆச்சாா்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளாா். படேலுடன் சில அமைச்சா்களும் பதவியேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனா்.
குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, கடந்த 2021, செப்டம்பரில் மாற்றப்பட்டு, அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக அவா் முதல்வா் பதவியை ஏற்கவிருக்கிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.