ஜம்மு - காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி
ஜம்மு - காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூஞ்ச் மாவட்டம் சாவ்ஜியன் பகுதியில் இன்று காலை மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்களுடன் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில், மண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க | இலங்கை தமிழர்கள் குடியிருப்பைத் திறந்துவைத்தார் முதல்வர்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.