FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தாய்லாந்தில் ஐ.டி. வேலை: மத்திய அரசு எச்சரிக்கை

தாய்லாந்தில் ஐ.டி. வேலை என்று கூறி ஏமாற்றும் மோசடி பேர்வழிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய வெளிவிவகாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

Updated On : 24 செப்டம்பர் 2022, 5:36 pm IST
தாய்லாந்தில் ஐ.டி. வேலை: மத்திய அரசு எச்சரிக்கை
பகிர்:


புது தில்லி; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் கொண்டவர்களை குறிவைத்து, தாய்லாந்தில் ஐ.டி. வேலை என்று கூறி ஏமாற்றும் மோசடி பேர்வழிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய வெளிவிவகாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

தாய்லாந்தில் வேலை என்று விளம்பரப்படுத்தி, தாய்லாந்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மியான்மருக்கு மக்களை கடத்திச் சென்று மிக மோசமான வேலைகளில் ஈடுபடுத்தும் கும்பல் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே, இதுபோன்ற வேலை மோசடி நபர்களிடம் இந்தியர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று ஐ.டி. வேலை என்றுச் சொல்லி வேலைக்கு ஆட்களை எடுத்துவிட்டு, பிறகு, போலியான கால் சென்டர்களை நடத்துவது போன்ற சட்டத்துக்கு விரோதமான வேலைகளில் ஈடுபடுத்தும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுபோன்ற மோசடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தற்போது மியான்மரில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments