கோப்புப்படம். 
இந்தியா

மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்கும்!: மர்ம நபர் அளித்த தகவல்!

மும்பையின் பல இடங்களில் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் நடக்கவிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

DIN

மும்பையில் பல இடங்களில் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் நடக்கவிருப்பதாக மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மும்பையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மும்பையின் பொது இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதுவரை எந்த வெடிபொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், கடந்த டிசம்பர் 27 அன்று ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பாதுகாப்பு சோதனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்டன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைக்காரா்களுக்கு அபராதம்

சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!

உத்தரகாசி பேரிடர்: 50 பேர் மாயம்! மீட்புப் பணியில் விமானப் படை!

சினிமா தயாரிப்பாளர் தானுவுக்கு செய்தது துரோகம் இல்லையா? - உடைக்கும் MallaiSathya |MDMK | Vaiko

ராகுலின் மூளைதான் திருடுபோய்விட்டது..! மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் கடும் தாக்கு!

SCROLL FOR NEXT