திருமணத்தின்போது மணமகள் மரணம்: சினிமா பாணியில் நடந்த திருமணம்
மணமகளின் பெற்றோர் துக்கத்துக்கு இடையேயும் மணமகளின் தங்கையை மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.
குஜராத் மாநிலத்தில், திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென மணமகள் மயங்கி விழுந்து மரணமடைந்தார். மணமகளின் பெற்றோர் துக்கத்துக்கு இடையேயும் மணமகளின் தங்கையை மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.
சுபாஷ்நகர் பகுதியில் நேற்று திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. ரத்தோரின் மகள் ஹீதலுக்கும், ராணாபாயின் மகன் விஷாலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண நாளும் வந்தது. ஆனால், அதுவே மணமகளின் கடைசி நாள் என்பது யாருக்கும் தெரியாது.
திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்க, உற்றார், உறவினர்கள் பாடல்களைப் பாடி இசைத்தபடி குதூகலிக்க, திடீரென மணமகள் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
மணமக்கள் குடும்பத்தில் இதனைக் கேட்டு கலங்கிப் போயினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட உறவினர்கள், திருமணம் நின்றுவிடக் கூடாது என்று பெண் வீட்டாரிடம் பேசி, பெண்ணின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதம் வாங்கினர்.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
இறந்த மகளின் உடலை பதப்படுத்திவைத்துவிட்டு, திருமணத்தை முடித்தனர் பெற்றோர். திருமணம் முடிந்த பிறகு, இறந்த மகளின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.