இந்தியா

நாட்டின் அரசியலமைப்பை பாஜக அழிக்கும்: மெகபூபா முப்தி

DIN

இந்தியாவின் மூவர்ணக் கொடியை மாற்றி காவிக் கொடியைக் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பை பாஜக அழித்து விடும் எனவும் அவர் தெரிவித்தார். தனது தந்தையின் 7-வது ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்ந்த முப்தி இதனை தெரிவித்தார். 

தந்தையின் 7-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிக்குப் பிறகு பேசிய மெகபூபா முப்தி கூறியதாவது: எனது தந்தைக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு நாடு எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் அதனால் தனது சொந்த மக்களை எதிர்த்து வெல்ல முடியாது. இது உண்மையில்லை என்றால் அமெரிக்கா வியட்நாமில் இருந்து வெளியேறி இருக்காது. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது. பாஜக நாட்டினுடைய தேசியக் கொடியை மாற்றி அதன் இடத்தில் காவிக் கொடியை ஏற்றும். நாங்கள் நாட்டு மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். பாஜக கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பை மீறி விட்டது. இனி வரும் காலங்களில் அரசியலமைப்பு பாஜக அழிக்கும். பாஜக ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பை மட்டும் மீறவில்லை. ஆனால், இந்திய அரசியல் அமைப்பையும் மீறியுள்ளது. அரசியலமைப்பு சட்டவிதி 370-ஐ நீக்கியதன் மூலம் இந்திய அரசியலமைப்பை பாஜக மீறியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT