முகப்பு
இந்தியா

மும்பை: சிலிண்டர் வெடித்ததில் ஐந்து வீடுகள் இடிந்தன!

மும்பையில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் அருகிலிருந்த ஐந்து வீடுகள் இடிந்துள்ளன. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
பகிர்:


மும்பை, செம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருகிலிருந்த 4 முதல் 5 இரண்டுமாடிக் கட்டமைப்புகள் இடிந்துள்ளதாக குடிமைப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 7.50 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்புப்படையினர், காவல்துறையினர், குடிமைப்பணி அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

விபத்தில் சிக்கிய 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக குடிமைப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நான்குபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →