இந்தியா

பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி போராட்டம்!

DIN

பணமோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி, ஆம் ஆத்மி கட்சியினர் டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தை நோக்கிச் செல்ல முயன்றனர், ஆனால் காவல்துறையும், துணை ராணுவ வீரர்களும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை பகலில் பட்டியலிட தில்லி உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

மேலும், சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணங்கள் அவரின் வழக்குரைஞருக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அபார வெற்றிக்குக் காத்திருக்கும் ராகுல் காந்தி!

சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வீழ்ச்சி: ரூ.36 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

25 தொகுதிகளின் இடைத்தேர்தல்: நிலவரம் என்ன?

காந்தி நகரில் தொடர்ந்து முன்னிலையில் அமித்ஷா!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை இடைத்தேர்தல்: முன்னாள் முதல்வர் மனைவிக்கு பின்னடைவு

SCROLL FOR NEXT