முகப்பு
இந்தியா

அரை மணிநேரம் போதும்! பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் எனக் காட்டுவேன்: மம்தா

மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி 2023, 8:42 pm IST
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
பகிர்:


மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்த கருத்தும் இடம் பெறவில்லை.  ஏழைகளுக்கு எதிராகவும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 

இம்முறை மாற்றியமைக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு எந்த வித பயனையும் அளிக்கப் போவதில்லை.

மத்திய அரசு தயாரித்துள்ள இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு பலனில்லாததால் இது கருப்பு பட்ஜெட். அரை மணி நேரம் இருந்தால்போதும், ஏழைகளுக்கான பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவேன் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments