முகப்பு
இந்தியா

கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி: பெருமையுடன் பகிர்ந்த பேரன்

கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி பற்றி பேரன் பெருமையுடன் பகிர்ந்த டிவிட்டர் பதிவு பலராலும் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டு வருகிறது.

Updated On : 10 ஜனவரி 2023, 12:25 pm IST
தங்கம் வென்ற 83 வயது பாட்டி
பகிர்:


கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி பற்றி பேரன் பெருமையுடன் பகிர்ந்த டிவிட்டர் பதிவு பலராலும் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டு வருகிறது.

தனது பேரன்களுடன் சேர்ந்து 83 வயது பாட்டி கேரம் போர்டு விளையாடும் விடியோவுடன் அந்த பதிவு வெளியாகியிருக்கிறது. அக்ஷன் மாராத்தே என்பவர் பகிர்ந்திருக்கும் அந்த டிவிட்டர் பகுதிவில், 83 வயதாகும் எனது பாட்டி, புனேவில் நடந்த கேரம் போர்டு போட்டியில் இவரை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக நடுக்கமில்லாத கைகளைக் கொண்டவர்களோடு போட்டியிட்டு இரட்டையர் பிரிவில் தங்கமும், தனி நபர் போட்டியில் வெண்கலமும் வென்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதற்காக நாங்களும் பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவி இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments