முகப்பு
இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்!

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்வதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

Updated On : 26 ஜூலை 2023, 11:27 am IST
பகிர்:


மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்வதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், பாரத ராஷ்டீரிய சமிதி கட்சியின் நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோர் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர். 

மணிப்பூர் வன்கொடுமை குறித்தி பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கியுள்ளன.

Advertisement

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 26) நாடாளுமன்றத்தின் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.