தில்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால்
தேசிய தலைநகரில் வளர்ச்சியின் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் மாசு குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
தேசிய தலைநகரில் வளர்ச்சியின் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் மாசு குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேஜரிவால் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
2016ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, வளர்ச்சிகள் வேகமடைந்துள்ளன. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மேம்பாலங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன.
தில்லியில் கடந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் இந்த காலகட்டத்தில் மாசு குறைந்துவிட்டது என்று அவர் கூறினார்.