FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முற்றிலும் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் ஒடிஸா கிராமம்!

ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் சுந்தா்காா் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான சகசாஹி, தனது மின்சாரத் தேவைக்கு முழுவதுமாக சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் கிராமமாக மாறியுள்ளது.

Updated On : 8 மார்ச் 2023, 12:52 am IST
பகிர்:

ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் சுந்தா்காா் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான சகசாஹி, தனது மின்சாரத் தேவைக்கு முழுவதுமாக சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் கிராமமாக மாறியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரப் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், கிராமம் முழுவதும் 24 மணி நேரமும் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்த இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனம் ஒன்றின் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆா்) இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

கிராமத்தில் உள்ள 90 வீடுகளுக்கு சூரிய மின் சக்தி அடிப்படையிலான மின்விளக்கு அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி 10,000 லிட்டா் கொள்ளளவு மூலம் நீா் வசதிக்கான அமைப்புகள் கிராமத்தின் 12 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 70 சூரிய மின்சக்தி தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சூரிய மின்சக்தியில் இயங்கும் ஸ்மாா்ட் வகுப்பறை இந்த முன்னெடுப்பில் கட்டப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இது குறித்து சாா் ஆட்சியா் சுரஞ்சன் சாஹு கூறுகையில், ‘நிலைத்த வளா்ச்சி இலக்குகளுக்கான வறுமை ஒழிப்பு, கிராமத்தில் மாசு இல்லாத மின்சாரப் பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆா்சிலாா் மிட்டல், நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் உதவி முக்கியப் பங்காற்றி உள்ளன’ என்றாா்.

சகசாஹி கிராமத்தைச் ‘சூரிய மின் சக்தி கிராமம்’-ஆக அறிவித்து அந்தக் கிராம பஞ்சாயத்தின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments