குருத்வாரா குறித்து சா்ச்சை கருத்து: ராஜஸ்தான் பாஜக நிா்வாகி நீக்கம்
ராஜஸ்தானில் குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
ராஜஸ்தானில் குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் வரும் 25-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, திஜாரா தொகுதியில் அண்மையில் பாஜக பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அல்வாா் பகுதியைச் சோ்ந்த பாஜக உள்ளூா் தலைவா் சந்தீப் தைமா, குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சந்தீப் தைமா நீக்கப்பட்டுள்ளதாக, ராஜஸ்தான் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவா் ஓம்காா் சிங் லகாவத் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.