குஜராத்: பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம்
குஜராத்தில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
குஜராத்தில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மாவட்டத்தில் போகாவோ ஆற்றின் பழைய பாலத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஆற்றில் விழுந்த நான்கு பேரை கிராம மக்கள் மீட்டனர்.
Advertisement
Advertisement
பின்னர் 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. சாலைகள் மற்றும் வீட்டுவசதி துறை பாலம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும், தடையை மீறி டிரக் ஒன்று கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.