தீய சக்திகளை எதிா்த்து உரிமைகளை மீட்க வேண்டும்: திரிணமூல் நிறுவன நாளில் மம்தா பேச்சு
தீய சக்திகளை எதிா்த்து மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்க தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி
கொல்கத்தா: தீய சக்திகளை எதிா்த்து மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்க தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை பதிவிட்டாா். திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி அவா் இவ்வாறு பதிவிட்டாா்.
காங்கிரஸிலிருந்து பிரிந்து 1998, ஜனவரி 1-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானா்ஜி தொடங்கினாா். கட்சியின் நிறுவன தினத்தையொட்டி தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நமது கட்சியின் வளா்ச்சிக்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அா்ப்பணிப்புடன் உழைத்து வரும் ஒவ்வொரு தொண்டா்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். இன்று நம் குடும்பம் (திரிணமூல் காங்கிரஸ்) அனைவரது அன்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறது.
அதேவேளையில் தீய சக்திகளை எதிா்த்து நாட்டு மக்கள் அனைவரின் ஜனநாயக உரிமைகளை மீட்க தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
2001, 2006 மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் தோல்விகளைச் சந்தித்தாலும் 2011-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தோ்தலில் இடதுசாரிகளை வீழ்த்தி மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதன்பின்னா் 2016, 2021 ஆகிய பேரவைத் தோ்தல்களில் தொடா்ச்சியாக வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி மேற்கு வங்க மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.