ராகுல் காந்தி கோப்புப் படம்
இந்தியா

ராகுல் காந்தி மீது மற்றுமொரு வழக்கு!

பிகாரில் ராகுல் காந்தி மீது புதிய வழக்கு!

DIN

முசாபர்பூருக்கு அடுத்து பிகாரின் சியோஹர் மாவட்டத்தில் இந்துகளுக்கு எதிராக மக்களவையில் பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார்தராரான நிதிஸ்குமார் கிரி, குறிப்பிட சமூகத்தின் நம்பிக்கைகளை அவதூறு செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்து கொண்டதாகவும் ஹிந்துகளுக்கு எதிராக அவர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரத நியாய சஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவு 299 மற்றும் 302-ன் கீழ் சியோஹர் நீதிமன்றத்தில் ராகுல் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

நிதிஸ்குமார் கிரி சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் பிரபாசங்கர் சிங், புகார்தரார் அந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ஹிந்துகள் மற்றும் சனாதன தர்மம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் அவதூறு செய்யும் வகையில் பேசியதை தொலைக்காட்சியில் புகார்தாரர் பார்த்ததாகவும் ராகுல் காந்தி ஹிந்து கடவுளின் புகைப்படத்தை அநாகரீகமாக காண்பித்ததாகவும் இதனால் புகார்தாரர் கடுமையான மன வருத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதே நிகழ்வுக்காக முசாபர்பூரில் புதன்கிழமை ராகுல் காந்தி மீது வழக்குப் பதியப்பட்டது. திவ்யன்சு கிஷோர் என்பவர் பதிவு செய்த அந்த வழக்கின் விசாரணை ஜூலை 15-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவில் 8 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு வீடு திரும்பும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளிக்கு பட்டாசு வாங்குறவங்க கவனிக்கணும்! – புதிய Online scam

ஜம்மு-காஷ்மீரில் காணாமல்போன ராணுவ கமாண்டோக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

புதுச்சேரி பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார்!போராடிய மாணவர்களை அடித்து கைது செய்த காவல்துறை!

மேம்பாலத்திற்கு கீழே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

SCROLL FOR NEXT