கோப்புப் படம் 
இந்தியா

மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை? போலீஸார் விசாரணை

உயிரிழந்தவர் குறித்து அடையாளம் தெரியாததால் போலீஸார் விசாரணை

DIN

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தில்லியின் உத்தம் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், சுமார் 40 வயதுடைய பெண் ஒருவர் நடைமேடையில் இருந்து, ரயில் பாதையின் மேல் குதித்துள்ளார். அவரை மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்த போதும், அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணிடம் அடையாளம் காணும் விதமாக எந்த பொருளும் இல்லாத காரணத்தினால், அந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தில் உயிரிழந்தாரா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த பெண்ணின் விவரங்களை சேகரிக்க முயன்று வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT