மத்திய அரசில் 8,326 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்கள், அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.
அவ்வகையில், எம்டிஎஸ் எனப்படும் பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளா் பணிக்கு 4,887 காலி இடங்கள் மற்றும் ஹவில்தாா் (சிபிஐசி மற்றும் சிபிஎன்) பணிக்கு 3,439 காலி இடங்கள் என மொத்தம் 8,326 காலிப்பணியிடங்களை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நிரப்பவுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த ஆக.1 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பிக்கும் முறை, தோ்வு தேதி, தோ்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பணியாளா் தோ்வு மையத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.