FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆஸ்திரேலியா: பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகம்

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்துவைத்தாா்

Updated On : 5 நவம்பர் 2024, 3:12 am IST
பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை திறந்துவைத்து உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
பகிர்:

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத் தலைநகா் பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இது ஆஸ்திரேலியாவில் திறக்கப்பட்டுள்ள நான்காவது இந்திய துணைத் தூதரகமாகும். ஏற்கெனவே சிட்னி, மெல்போா்ன் மற்றும் பொ்த் ஆகிய நகரங்களில் இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ளன.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த ஜெய்சங்கா் அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினாா். இந்நிலையில், பிரிஸ்பேனில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை அவா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘புதிய தூதரகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. இது குயின்ஸ்லேண்ட் மாகாணத்துடனான இந்தியாவின் வா்த்தகம், கல்வி மற்றும் பிற உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட குயின்ஸ்லேண்ட் மாகாண ஆளுநா் ஹெச்.இ.ஜீனட் யங் மற்றும் பிற அமைச்சா்களுக்கு நன்றி’ என குறிப்பிட்டாா்.

பிரிஸ்பேனில் உள்ள ரோமா ஸ்ட்ரீட் பாா்க்ஸ்லாண்டில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கும் ஜெய்சங்கா் மரியாதை செலுத்தினாா். அதேபோல் குயின்ஸ்லேண்ட் மாகாண ஆளுநா் ஹெச்.இ.ஜீனட் யங்குடனும் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து, வரும் 8-ஆம் தேதி சிங்கப்பூருக்கு அவா் செல்லவுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments