தெலங்கானாவில் ராகுல் காந்தி! சாதிவாரி கணக்கெடுப்பு கூட்டத்தில் பங்கேற்பு!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத் தேர்தலின்போதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையாகவும் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது. மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
அந்தவகையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் நாளை(புதன்கிழமை) சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது. இது நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பொய்யானவர்களின் தலைவர் மோடி: கார்கே பேச்சு!
இந்நிலையில் ஹைதராபாத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தொடங்கியுள்ளது.
இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வல்லுநர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடுகின்றனர்.