கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் நீலேஸ்வரம் அருகே உள்ள அஞ்சுகூட்டம்பலம் வீரர்காவு கோயில் திருவிழாவில் கடந்த மாதம் 28-ஆம் தேதி நள்ளிரவு பட்டாசுகள் வெடித்ததில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தீக்காயம் அடைந்த 63 பேர் இன்றளவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ரு வருகின்றனர். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜித் என்ற நபர் சிகிச்சை பலனின்றி இன்று(நவ. 9) உயிரிழந்தார். இதனையடுத்து பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.