கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் தீ விபத்து
கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன.
கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் உல்டடாங்காவில் உள்ள குடிசைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.22 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்கள் காலை 9 மணியளவில் தீயை அணைத்தனர்.
Advertisement
Advertisement
கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
இந்த தீ விபத்தில் 6 குடிசைகள் சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்தில் யாருக்கும் காயம் எதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் மேலும் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.