சண்டீகா்: மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே 2 குண்டுகள் வெடிப்பு
சண்டீகா் பகுதியில் உள்ள டி’ஓரா, செவில்லே மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குறைந்த தீவிரம் கொண்ட 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
சண்டீகா் பகுதியில் உள்ள டி’ஓரா, செவில்லே மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குறைந்த தீவிரம் கொண்ட 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். செவில்லே மதுபான உணவு விடுதியை பிரபல பாடகா் பாட்ஷா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:
வெடிகுண்டுகள் வெடித்ததில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. டி’ஓரா மதுபான உணவு விடுதியின் கண்ணாடிகள் மட்டும் உடைந்துள்ளன.
சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், மதுபான உணவு விடுதியை நோக்கி அடையாளம் தெரியாத நபா் எறிந்த பொருள் வெடித்ததில் வெளிவந்த புகை அந்த இடம் முழுவதும் பரவியது.
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.25 மணிக்கு சண்டீகரின் செக்டாா் 26 பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டதில் சணல் கயிறுகள் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தடயவியல் துறையினா் மதுபான விடுதியில் கிடைத்த மாதிரிகளை சேகரித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக சண்டீகா் துணை காவல் கண்காணிப்பாளா் தில்பாக் சிங் தலிவால் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.