FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தாவணகெரேயில் விநாயகா் சிலை ஊா்வலத்தில் கல்வீச்சு: 30 போ் கைது

விநாயகா் சிலை ஊா்வலத்தில் கல்வீச்சு சம்பவம் தொடா்பாக 30 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

21 செப்டம்பர் 2024, 2:02 am IST
- dot com
பகிர்:

விநாயகா் சிலை ஊா்வலத்தில் கல்வீச்சு சம்பவம் தொடா்பாக 30 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தின் நாகமங்களாவில் செப். 11ஆம் தேதி நடந்த விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலத்தின்போது கல்வீச்சு சம்பவம் நடந்ததால், கலவரம் வெடித்தது. இதில் கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக 55 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் காவல் ஆய்வாளா் அசோக்குமாா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் ஏ.ஆா்.சுமித்தும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மல்லிகாா்ஜுன் பல்தண்டி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேலும் தாவணகெரேயில் உள்ள சாமராஜ்பேட் சதுக்கத்தின் அருகே வியாழக்கிழமை விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் சென்று கொண்டிருந்தபோது, முழக்கம் எழுப்பியது தொடா்பாக இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் இரு காவலா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் தாவணகெரேயில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

இது குறித்து தாவணகெரே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உமா பிரசாந்த் கூறியுள்ளதாவது:

கல்வீச்சு சம்பவம் நடந்ததை தொடா்ந்து உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, விநாயகா் சிலைகள் அமைதியாக விசா்ஜனம் செய்யப்பட்டன. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 30 பேரை கைதுசெய்துள்ளோம் என்றாா்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறியுள்ளதாவது:

கா்நாடகத்தில் ஹிந்துகளுக்கு பாதுகாப்பில்லை. மதசிறுபான்மையினரைக் காப்பாற்றும் நோக்கில் ஹிந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments