தேசியக் கொடிக்குப் பதில் அனுமன் கொடி: கெரகோடு கிராமத்தில் 144 தடை!
கர்நாடகத்தில் அனுமன் கொடியை ஏற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையில் கெரகோடு கிராமத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் அனுமன் கொடியை ஏற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையில் கெரகோடு கிராமத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கொடிக்கம்பம் வைப்பதற்கு கிராம பஞ்சாயத்து அனுமதி அளித்திருக்கிறது. அதற்காக நிறுவப்பட்ட 108 அடி கொடிக் கம்பத்தில் ஜனவரி 26-ம் தேதி தேசியக் கொடிக்குப் பதிலாக அனுமன் கொடியை ஏற்றியுள்ளனர்.
தகவல் அறிந்து தேசியக் கொடியை அகற்றச் சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியும், கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தியுள்ளனர். பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதனால், கெரகோடு கிராமத்தில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு நிலைமை மோசடைந்ததால் போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அனுமன் கொடி இறக்கப்பட்டு தேசிய கோடி ஏற்றப்பட்டது.
இதைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெரகோடு கிராமத்தில் தொடர் பதற்றம் நிலவி வருவதையடுத்து அங்கு 144 உடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.