பானிபூரி விற்ற முன்னாள் ஐடி ஊழியர்.. கர்ப்பிணி மனைவி தற்கொலையில் மர்மம்!
பெங்களூரில் 27 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் பானிபூரி விற்பனையாளரின் வரதட்சணை கொடுமையால் 27 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சுத்தகுண்டேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா(27). இருவரும் ஐடி துறையில் பணியாற்றி வந்தனர். திருமணமான ஓராண்டில் பிரவீன் தனது ஐடி பணியை விட்டுவிட்டு பானிபூரி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பு ஷில்பாவும் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ஷில்பா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்தின்போது ஷில்பா குடும்பத்தினர் வரதட்சணையாக ரூ.50 லட்சம், 150 கிராமம் தங்கநகை வரதட்சணை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் பானிபூரி கடையை நடத்திவந்த பிரவீன் புதிதாகத் தொழில் தொடங்க பணம் தேவைப்படுவதாகக் கூறி ஷில்பாவை தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்துள்ளார்.
Advertisement
Advertisement
ஷில்பாவின் குடும்பத்தினர் தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் பிரவீனின் பணத்தேவையால் ஷில்பா நாளுக்குநாள் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் வெறுப்படைந்த ஷில்பா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்திய பிரவீன் குடும்பத்தினர் மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் தம்பதியரிடையே பிரச்னை தொடர்ந்து வந்தது.
விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற ஷில்பா மனம் உடைந்து, தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து பிரவீனின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் ஷில்பாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவர் பிரவீன், அவரது தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
A 27-year-old woman was found dead in south Bengaluru earlier this week, prompting a police investigation into allegations of dowry harassment and domestic abuse.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.