கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!
கோவாவிலுள்ள இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் பற்றி...
கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்தது.
வடக்கு கோவாவின் அா்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான இரவு விடுதியான பிா்ச் பை ரோமியோ லேனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியா்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் கோவா போலீஸார், இரவு விடுதியின் உரிமையாளர்கள் இருவர் மீதும், அந்த விடுதியின் மேலாளர் மீதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
summary