சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்  
இந்தியா

சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்!

சரயு நதியில் அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல் ஜலசமாதி.

DIN

அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலின் தலைமை அா்ச்சகா் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது.

85 வயதான அவருக்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன (எஸ்ஜிபிஜிஐ) மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அயோத்தியில் உள்ள இல்லத்தில் மகந்த் சத்யேந்திர தாஸின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை சரயு நதியில் விடப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நதியின் ஆழமான பகுதிக்கு சத்யேந்திர தாஸின் உடலை கொண்டுசென்ற அர்ச்சகர்கள் ஜலசமாதி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாட்டா மெமோரியல் மருத்துவமனையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்!

தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

மத்திய துணை ராணுவப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT