முகப்பு
இந்தியா

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 23 பிப்ரவரி 2025, 8:13 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின் மீது மோதி விபத்தையும் ஏற்படுத்தி விட்டார். இந்த விபத்தில் அர்ஜூனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தை அர்ஜூனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருந்தபோதிலும், அர்ஜூனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்ததால், அர்ஜூன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, குழந்தையின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, விபத்துக்கு காரணமான சிறுவன் சாரதியையும், காரின் உரிமையாளரான சிறுவனின் சகோதரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறார்களை வாகனங்களை இயக்க அனுமதித்தது, பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தை முதலான காரணங்களால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments