பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!
பிகாரில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு....
பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
ஆரம்பத்தில் இருந்தே பிகாரில் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். தற்போது ஆகஸ்ட் 1, 2025 முதல், அதாவது ஜூலை மாதக் கட்டணத்தில் இருந்தே, அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் 1.67 கோடி பிகார் குடும்பங்கள் பயனடைவார்கள்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வீடுகள் அல்லது அருகிலுள்ள பொது இடங்களில் சூரிய மின் வசதி நிறுவ முடிவெடுத்துள்ளோம்.
ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய மின்சார வசதி அமைக்க முழு செலவையும் மாநில அரசு ஏற்கும், மீதமுள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் சூரிய மின்சார உற்பத்தி 10,000 மெகாவாட் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக, அரசுத்துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Bihar Chief Minister Nitish Kumar announced on Thursday that up to 125 units of electricity will be provided free of cost from August onwards.
இதையும் படிக்க : அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.