எல்லையில் உடைந்த நிலையில் விமானப் படை ட்ரோன் மீட்பு!
இந்திய எல்லையில் விமானப் படையின் ஆளில்லா ட்ரோன் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து...
ராஜஸ்தான் மாநிலத்தில், அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஆளில்லா ட்ரோன் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர் மாவட்டத்தின் ராம்கார் பகுதியில், பாகிஸ்தான் நாட்டுடனான இந்திய எல்லை அமைந்துள்ளது. அங்குள்ள சட்டார் மைனர் எனும் இடத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஆளில்லா ட்ரோன் ஒன்று உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ட்ரோன் உடைந்து கிடந்த விவசாய நிலத்துக்கு விரைந்த காவல் துறையினர் உடனடியாக ட்ரோனை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக இன்று (நவ. 20) தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சம்பவயிடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்த இந்திய விமானப் படை அதிகாரிகள், உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோனை கைப்பற்றியுள்ளனர்.
இருப்பினும், அந்த ட்ரோன் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? உடைந்ததற்கான காரணம் என்ன? ஆகிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி குண்டுவெடிப்பு: மேலும் 4 பேரை கைது செய்த என்ஐஏ! 3 பேர் மருத்துவர்கள்!
An unmanned drone belonging to the Indian Air Force has been found broken on the India-Pakistan border in the state of Rajasthan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.