முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்! பலத்த பாதுகாப்பு! தேடுதல் பணி தீவிரம்!

இந்திய எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவல் கண்டறியப்பட்டது குறித்து...

Updated On : 10 மார்ச், 2026 at 1:58 PM
எல்லைப் பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் - ANI
பகிர்:

இந்திய எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவல் காரணமாக, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் டபோ பகுதியில் திங்கள்கிழமை (மார்ச் 9) இரவு சந்தேகிக்கப்படும் வகையில் பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவியது.

இந்தத் தகவலையடுத்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அந்தப் பகுதி முழுவதும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த ட்ரோன் மூலம் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் ஏதும் வீசப்படவில்லை என்பதை உறுதிசெய்வதற்காக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தத் தேடுதல் பணியில் ராணுவம், காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை சார்ந்த வீரர்கள் ஆகியோர் இணைந்து ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், சம்பா மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் உள்ள பாய் நல்லா, லாலா சாக் மற்றும் மலானி ஆகிய இடங்களில் காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோதனைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

summary

Security has been beefed up and a search operation has been launched in earnest due to Pakistani drone intrusion along the Indian border.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.