இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்
ராஜஸ்தானில் இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்டது.
ராஜஸ்தானில் இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்டது.
ராஜஸ்தானின் மாதோகர் கிராமத்தில் வசித்து வருபவர் கலுராம் ரெபரி. இவர் பண்ணைக்குச் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தன் கையில் வைத்திருந்த 10 கிலோ காலி பால் கேனை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள தலையில் கவிழ்த்தி வைத்தபடி சென்றிருக்கிறார்.
ஆனால் அந்த பால் கேன் அவரின் தலையில் மாட்டிக்கொண்டது. பால் கேனை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதனால் அவர் சற்று பீதியடைந்தார். இதை அறிந்த கிராமவாசிகள் அவரை உடனடியாக அருகிலுள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.
Advertisement
அவரை ஒரு குறிப்பிட்ட நிலையில் படுக்கச் சொன்னார்கள். கட்டர் உதவியுடன் கேனின் மேல் பகுதி கவனமாக வெட்டப்பட்டது. பிறகு, கேன் அவரது தலையிலிருந்து அகற்றப்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் அவர் காயமின்றி தப்பினார்.
அதன்பிறகே அந்த இளைஞர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தற்போது இந்தச் சம்பவத்தின் விடியோ வைரலாகி வருகிறது.