பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை- நேபாள அரசு!
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள சம்பவத்துக்குப் பின் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணவில்லை என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் தங்கியிருந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், காணாமல் போன 300 பேரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளம் கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இதில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் இருந்த கட்டடங்கள், நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
Advertisement
Advertisement
நேபாளத்தில் திபெத்தையொட்டி இருக்கும் ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 போ் உயிரிழந்தனா். மேலும், 133 இந்தியா்கள் உள்பட சுமாா் 750 பேரைக் காணவில்லை என்று நேற்று தகவல்கள் வெளியாகின. காணாமல் போன இந்தியா்களில் தமிழகம், புதுவையிலிருந்து சென்ற 37 பேரும் அடங்குவா்.
இந்த நிலையில்தான், போடே கோஷி ஆற்றில் வெள்ள நிகழ்வுக்குப் பிறகு இந்தியர்கள் 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Massive Floods: Over 300 Indians Missing Nepal Govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.