முகப்பு
இந்தியா

கடல் உணவுகள், காலணிகள் ஏற்றுமதிக்கான மூலப் பொருள்களுக்கு வரிச் சலுகை!

பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள், தோல் அல்லது செயற்கை காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி 2026, 12:31 am IST
பகிர்:

பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள், தோல் அல்லது செயற்கை காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு, முந்தைய ஆண்டின் ஏற்றுமதி விற்று முதலின் மதிப்பில் ஒரு சதவீதமாக அனுமதிக்கப்பட்டது, 3 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.

அதுபோல, தோல் அல்லது செயற்கைத் தோல் காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்கள்களுக்கு வரியில்லா இறக்குமதி அனுமதிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், முழுமைபெற்ற தோல் அல்லது ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் அல்லது செயற்கை காலணிகள் அல்லது பிற தோல் பொருள்கள் ஏற்றுமதிக்கான தற்போதுள்ள 6 மாத கால வரம்பு, ஓராண்டாக நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் 50 சதவீத வரியை விதித்தது, தொழிலாளா் சாா்ந்த இந்திய உற்பத்தித் துறைகளை கடுமையாக பாதித்த நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியான இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments