FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாகாலாந்து: வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரா் ஒருவா் உயிரிழப்பு

நாகாலாந்து சுமோகெடிமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா் ஒருவா் உயிரிழந்தார்.

பகிர்:

நாகாலாந்து மாநிலத்தின் சுமோகெடிமா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா் ஒருவா் உயிரிழந்ததாகவும் 4 போ் படுகாயமடைந்ததாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இருப்பினும், இத்தாக்குதலில் பாதிப்படைந்தவா்கள் அல்லது தாக்குதலுக்கு காரணமானவா்கள் என யாருடைய பெயரும் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments